சென்னையே,
உனக்கு இன்று பிறந்த நாளாமே?
காலையில் மட்டும்
கொஞ்சம் கதிரவன்!!
பத்து மணிக்கு - பன்னீர் தூறல்,
ஒரு மணிக்கு - ஓயாத மழை,
மூன்று மணிக்கு - மூழ்கும் மழை,
ஐந்து மணிக்கு - ஐப்பசி மழை..
உனக்கு விழும் வாழ்த்து மழையில்,
நானும் நினைய வாய்ப்பு!!
காரியங்கள் காத்திருக்கட்டும்..
கால் சட்டையும், காய காத்திருக்கட்டும்..
வாழ்த்து மழை தொடரட்டும்!
No comments:
Post a Comment