Tuesday, August 17, 2010

நடு நிசி நாயகி

இரு காதுமடல் கடித்துப்பேசி,
கன்னமெல்லாம் ஈரமாக்கி,
கைக்கு அடங்காத களவானியின்
கதகதப்பில் கண் அயர்ந்து..
கண்மூடி உறங்கிப்போனேன்!

என் உள்ளங்கை கட்டிலாய்,
என் விரல்கள் தலையணையாய்,
என்னவளும் உறங்கிப்போனாள்..

நள்ளிரவு நகர்ந்த பின்னால்,
சிறிதாய் சிணுங்கத் தொடங்கினாள்...
உடலினில் வருடி,
நெற்றியில் படித்தேன்..
உணர்ந்தேன் -
உயிர் அணு பாயத்துடிக்கிறாள் என்று!!

??????

"BEEP" - LOW BATTERY!! - Blackberry mobile.. :-)