Tuesday, August 17, 2010

கலங்கரை விளக்கம்

நேற்று...
மாலைப் பொன்னொளிர் நேரம்...
ஒரு நகைசுவைப் புத்தகம் வாங்கி,
கடற்கரையில் கைகோர்த்து நடந்தோம்...

பழுதடைந்து பூட்டி இருந்த கலங்கரை விளக்கம்,
நமக்காக மட்டும் திறக்கப்பட்டது...

கடற்கரை நோக்கி கனிவோடு அமர்ந்தோம்,
கதிரவன் கரைய, கருமை கூடுயது..

நான் புத்தகத்தை விரித்துப் படிக்கத்தொடங்கினேன்,
உன் புன்னகையில் என் கண் கூச,
இரவு முழுவதும், உன்னோடு சிரித்து மகிழ்ந்தேன்..

இன்று 'தினத்தந்தி'யில்,
இரண்டாம் பக்கச்செய்தி...
"பழுது அடைந்த கலங்கரை விளக்கம் மீண்டும் செயல் பட தொடங்கியது! -
கப்பல்கள் விபத்தின்றி கரை சேர்ந்தன.
"

- விபத்தில் சிக்கிய வாலிபன்.

3 comments:

chandana easwaramurthy said...

LOL, kaalangathaala nakkalukku onnum koraichal illai!!!

Aarti said...

hahahaha..... Good one!!

Anonymous said...

காதலும் கலங்கரை விளக்கமும்... விளங்குகிறது... வாழ்த்துக்கள் அண்ணா...