Saturday, February 9, 2013

பனிப்போர்

இலை மீது குடி ஏறி நாள் ஒன்று முடியவில்லை,
இல்லை தீது என்று கூறி தோள் நிற்க வலிமையில்லை.

நேற்று,
மேகம் பனித்துளியை பிரசவிக்க,
கதிரவனுக்கு சிறை தண்டனை.!

இன்று,
கதிரவன் பழி வாங்க,
பனித்துளிக்கு மரண தண்டனை.!
 
 

1 comment:

Jenz said...

அந்த
மரண தண்டனையும்
பிரசவித்தது
இந்த
கவிதைப் பனித் துளியை